Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madurailirundhu Imayathukku
Madurailirundhu Imayathukku
Madurailirundhu Imayathukku
Ebook77 pages48 minutes

Madurailirundhu Imayathukku

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700166
Madurailirundhu Imayathukku

Read more from Indira Soundarajan

Related to Madurailirundhu Imayathukku

Related ebooks

Related categories

Reviews for Madurailirundhu Imayathukku

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madurailirundhu Imayathukku - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மதுரையிலிருந்து இமயத்துக்கு…

    Maduraiyilirundhu Imaiyathukku…

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    விச்சந்திரன் என்று ஒரு நண்பர்!

    மதுரையில் என்னுடைய டி.வி.எஸ் - ல் பணிபுரிபவர். வருடத்தில் ஒருநாள் கூட எதற்காகவும் லீவு போட மாட்டார். ஆனால், சேர்த்து வைத்து ஒரே தடவையில் இருபது நாளோ இல்லை முப்பது நாளோ போட்டுவிட்டு தனியாளாக வடநாட்டுப் பக்கம் கிளம்பிவிடுவார்.

    இது எனக்கு ஒரு ஆச்சரியம்.

    ஒருநாள் அவரிடமே கேட்பேன். எப்படி ரவி… இப்படி தனியா டூர் போறீங்க. அப்படி என்ன இருக்கு வடநாட்டுல?

    என் கேள்விக்கு ஒரு சிரிப்பைத்தான் பதிலாக உதிர்த்தார் அவர். ஆனால், அதில் ஏராள பொருள் இருப்பதாகத் தோன்றியது. நான் விடவில்லை. தொணப்பி எடுத்தேன். பிறகுதான் மெல்ல வாய் திறந்தார்.

    ‘இந்த இந்திய மண்ணில் உள்ள சிவஸ்தலங்கள் அத்தனைக்கும் சென்று வந்துவிட வேண்டும் - அவ்வளவு நதிகளிலும் நீராடி விடவேண்டும். குறிப்பாக பூலோக கைலாசமாக விளங்கும் மானஸரோவரையும், இயற்கையே வடிவமைத்து இயற்கையே நிர்வகிக்கும் அமர்நாத் ஆலயத்தையும் தரிசித்து விடவேண்டும் என்பது என் ஆசை என்றார். ‘அப்படியே இராமேஸ்வரம் உட்பட ஜ்யோதிர் லிங்கங்கள் உள்ள எல்லா ஆலயங்களையும் தரிசித்து விடவேண்டும்’ என்றார்.

    வாலிப வயதில் ஒரு சினிமாக்காரருக்கு ரசிகராக இல்லாமல், டி.வி. சீரியல்களிலும் மாட்டிக் கொள்ளாமல் ஒரு சன்யாசி போல அவர் பேசியது அந்த சமயத்தில் எனக்கு கொஞ்சம் மிகையாகக் கூட தோன்றியது.

    ஆனால், அந்த சிவம் ஒருவரை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டால் மனநிலையில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்பதை நான் பிறகுதான் உணர ஆரம்பித்தேன்.

    அன்றாடம் மதுரை மீனாட்சி ஆலயம் சென்று வரும் நான், மீனாட்சியை மிக அருகிலும் அந்த சிவமாகிய சொக்கநாதரை தூர நின்றுமே தரிசித்துவிட்டு வருவது தான் வாடிக்கை.

    காரணம், மதுரை என்றால் மீனாட்சி மட்டுமே பிரதானம் என்கிற ஒரு தூக்கலான நினைவு. யாரைக் கேட்டாலும் மீனாட்சி கோவில் என்றுதான் கூறுவார்கள். சொக்கர் கோவில் என்று கூறமாட்டார்கள். இந்த ஸ்தலத்தில் சக்தியாகிய உமை மீனாட்சிக்கு அப்படி ஒரு மதிப்பு.

    ஆனால், சிதம்பரத்தில் அந்த சிவனே பிரதானம்.

    அங்கே சென்றால் ட்யூன் செய்யப்பட்டது போல மனது அந்த நடராஜனைத்தான் பிரதானமாக பாவித்து வணங்கும்.

    இந்து மதம் சில சிறப்புகளை உணர்த்தவும் சில சுலப வழிமுறைகளுக்காகவும் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மனோபாவம் இது.

    உண்மையில் சக்தியோ சிவமோ இல்லை, வைணவமோ பிரம்மமோ அதுவுமில்லை, இஸ்லாமியமோ கிறிஸ்தவமோ, பௌத்தமோ, சமணமோ எல்லாமே ஒன்றே இறை என்பதைத்தான் வலியுறுத்துகின்றன. அந்த ஒன்று என்கிற உணர்வு ஒவ்வொரு மனதிலும் ஏதோ ஒரு கட்டத்தில் வலுப்படும்போது, இந்த தனித்த சிறப்புக்களை ஒதுக்கி அதைக் கடந்து மூலாதாரத்தைப் பார்த்து அப்படியே அமைதி அடைந்துவிடும்.

    ஒரு ஊருக்கு பல பாதைகள் போலத்தான், பல மதங்கள்… பல வழிபாட்டு முறைகள். முடிவான இலக்கு ஒரே ஊர் என்னும் மோட்சசக்தி மட்டுமே.

    இப்படி ஒரு நிலையில் மீனாட்சி தரிசனம் செய்யச் சென்ற நான், அவளை நெருக்கமாக நின்று தரிசிக்க முடியாதபடி ஒதுக்கித் தள்ளப்பட்டு சொக்கநாதர் சன்னதியில் மிக நெருக்கமாய் நெடுநேரம் தரிசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றேன்.

    அப்போது என்னுள்ளும் ஒரு கேள்வி –

    ‘இத்தனை நாளில் இப்படி நிகழாமல் இப்போது ஏன் நிகழ்கிறது?’ என்று – ஒரு அதிசயம் போல தொடர்ந்து சிவாலய தரிசனங்களாக குறிப்பாக

    Enjoying the preview?
    Page 1 of 1